கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.@சங்கீதம் 5:3
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஜான் எல்லர்டன், 1871 (An­oth­er Day Be­gun). சௌ. ஜான் பாரதி (மே 20, 2020),

இராகம் பிராங்கோனியா, யோஹுன் ப. கோனிக், 1738 (🔊 pdf nwc).

உருவப்படம்
ஜான் எல்லர்டன்
1826–1893

இன்னோர் நாளும் இதோ,
கிருபைகூறும் நீரே,
ஆம் மீண்டும் சூர்யன் சாயும் முன்,
உம் அண்டை சேரவே.

இன்றும் யாம் முயல,
எம்பிரயாசம் தானே,
ஆம் நீர் காத்திடும் உள்ளங்கள்,
ஒவ்வோர் நிமிடமும்.

பயத்தோடே இந்நாள்,
சோதனைகள் இதோ,
ஆம் பாவம் காத்திருக்குதே,
முடிவும் நெருங்க.

நம்பிக்கையில் இந்நாள்,
நீர் எம்மோடிருக்க,
உம் வல்லமையே போதுமே,
எம்மைக்காத்திடவே.

கிருபையின் இன்னோர் நாள்,
எம் பாதைக்குதவ,
இன்னோர் அடி வைத்தோம் முன்னே,
நித்ய வாழ்வை நோக்கி.
ஆமேன்.