மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.@மத்தேயு 25:40
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

எமிலி வெர்னன் கிளார்க், 1890 (O God of Mer­cy! Heark­en Now). சௌ. ஜான் பாரதி (மே 23, 2020),

ஜான் சி ஹட்டன், 1793 ஜான் சி ஹட்டன் அவர்கள் இயற்றியதாக கருதப்படுகிறது (🔊 pdf nwc).

இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ,
உம் ஆசனம் முன் மண்டியிட்டோம்,
உள்ளத்தின் ஆழத்தின் புலம்பலிதே,
உலகெங்கும் உபத்ரவப்படுவோர்காய்.

விண்ணில் வீற்றிருக்கும் உம்மிடம்,
மின்னிடும் நட்சத்ர கூட்டத்தின் பின்,
இங்கும் நீர் தங்கிடும் இடமறிந்தோம்,
கதறிடும் மாந்தரின் அருகினிலே.

குணமளிக்கும் ஊற்றே இங்கும்,
மனதுருகிடும் தூதன் சிறகினின்று,
விரைவாய் வல்லமை யாய் வந்தே,
வேதனையால் துன்புறுவோர் மேல்.

வறுமையும் பசியும் நிறைந்த இடம்,
குழந்தைகள் சிறுவரும் ஓலமிட,
சேவைசெய்ய எம்மை அழைத்தீரோ?
உம்மையவர் எம்மில் காண.