அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று; அவரோ நித்திரையாயிருந்தார்.25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.26. அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.@மத்தேயு 8:23–26
உருவப்படம்
ஹோரசியோ ரிச்மண்ட் பால்மர்
1834–1907

மேரி ஆன் பேக்கர், 1874 (Mas­ter, the Tem­pest Is Rag­ing). சௌ. ஜான் பாரதி (ஜூன் 25, 2022),

ஹோரசியோ ரிச்மண்ட் பால்மர், 1868 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஆண்டவா புயலைப்பாரும்,
ஆம் சீரியே வீசுதே,
காரிருள் போல் மேகமும் சூழ்ந்தே,
ஒதுங்கக்கரை காணோம்,
அழிந்திடோமோ யாம் மூழ்கி,
உறங்குகின்றீரே, ஒவ்வோர்
நொடியும் நடுங்கச்செய்ய,
ஆழ் கடல் நம் கல்லறையோ?

பல்லவி

ஆம் காற்றும் அலைகளும் கேட்க்குமே,
நில் அமைதி, கடலின் சீற்றமோ,
யாவுமே பேய் ஆயினும் வேறேதுமாயினுமே,
ஆம் கடலின் ஆண்டவா நீர் தங்கும்
எக்கப்பலும் மூழ்கிடாதே,
நீர் ஆண்டவர் விண்ணிற்கும்
ஆம் மண்ணிற்கும் நில் அமைதி, அமைதி யாவும்
உம் சத்தம் கேட்டிடும், நில் அமைதி.

என் ஆன்மா துயரம் கொண்டு,
நான் உம் பாதம் வீழ்கிறேன்,
என் உள்ளம் வியாகுலத்தால் சோர,
விழித்தே நீர் இரட்சியும்,
நீரோடை போல என் பாவம்,
என்னையே மூழ்குதே,
நான் அழிகிறேன் வந்தே தூக்கும்,
ஆம் விறைந்தே காத்திடுமே,

பல்லவி

புயலும் அமைதியாகி,
ஆம் யாவும் ஓய்ந்ததே,
சூர்யனும் நீர் மேலே தோன்றி,
விண் வீடு என் உள்ளத்தில்,
என்னோடே தங்கும் என் நாதா,
தனியே விடாமலே,
நான் ஆனந்த மாகவே சேர்வேன்,
ஆம் விண் வீட்டின் கரையிலே,

பல்லவி