கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.@எபிரெயர்.12:6–10
portrait
பவுல் பி ஹென்கெல்
1754–1825

அருள்திரு பவுல் பி ஹென்கெல், 1816 (Have Mer­cy, Lord, on Us, We Pray). சௌ. ஜான் பாரதி (மே 19, 2020),

இராகம் மேர்டியர்டம், ஹியூக் வில்சன், 1800 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

கர்த்தாவே தயைகூறுமே,
உம் கிருபை காண்பியும்,
இவ்வாதையை நீர் அகற்ற,
யாம் பாத்ரர் ஆகோமோ?

உம் தண்டனையும் நியாயமே,
எம் தீமைக்காய்தானே,
யாம் உணர்ந்தோம் வருந்தியே,
இத்தீங்கு நாட்களில்.

மரணம் மாய்தே செல்லுதே,
ஊரெங்கும் சென்றிதோ,
எண்ணுகின்றோம் யாம் மாய்ந்தோரை,
இங்கும் அங்கும் எங்கும்.

இல்லங்கள் தேடி வந்திதோ,
ஆம் தங்கி மாய்க்கவே,
மாண்டோர் சென்றே குழிகளில்,
ஆழ்ந்தே பாழ் ஆழியில்.

உள் வேதனை கவலைக்கொண்டே,
எம் நெஞ்சம் வேண்டுதே,
நீர் கிருபையால் வந்திங்கேயே,
இவ்வாதை நீக்குமே.