நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.@புலம்பல் 3:22
உருவப்படம்
வில்லியம் கல்லன் பிரையண்ட்
1794–1878

வில்லியம் கல்லன் பிரையண்ட், 1820 (Fa­ther! To Thy Kind Love We Owe). சௌ. ஜான் பாரதி (மே 19, 2020).

இராகம் ச்சர்ச் டிரயம்பென்ட், வில்லியம் எலியாட், 1874 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

உம் அன்பெம் கடன் ஆண்டவா,
பூமியின் நன்மை யாவுமே,
நோயின்மை தந்தே தேற்றுமே,
கண்ணீரில்லா மகிழ்ச்சியாய்.

சூர்யனின் வெப்பம் மழையும்
மலை மடுவின் பழங்களும்,
நீர் தந்ததால் ஒளிர்ந்திடும்,
விண்மீன்கள் பிரதிபலித்தே.

பனி மழை சூராவளி
வாதை நோய்களும் மாய்க்கவே,
நீர் ஸ்வாசிக்க இப்பூமியில்
துளிர்க்கும் மலர் சோலைகள்.

நீர் மாத்ரம்தானே எமக்கு,
தயவு அன்பு காருண்யம்
கற்றோம் யாம் உம்மை போற்றவே,
மா தூயதாம் உம் நாமமே.

இருள் சூழ்ந்திடும் வேளையும்
எம் வாழ்நாள் முற்றும் போதிலும்,
எம் நம்பிக்கையின் ஆசானே,
நீர் எமக்காசீர் தந்திடும்.

பாரும் யாம் குற்றமுள்ளோர் தான்
பொறுமையுடன் தண்டியாமலே,
தயவாய் ஜெபம் கேட்டே நீர்
கருணையுடன் தாங்குமே.