எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி,
கேள் இன்பம் பொங்கும் நற்செய்தி,
தூய ஒளி பிரகாசிக்க,
இராவின் இருள் பயம் அகல.
பேரின்பம் எங்கும் பரவிடுதே,
தூதர் இறங்கி தெறிவிக்க,
எங்கும் நற்செய்தி சென்றடைய,
ஆனந்த கீதம் எதிரொலிக்க.
நீதியின் சூர்யன் தோன்றினார் பார்,
பூவில் ஆசீர் பொழிந்திடவே,
ஒவ்வோர் உள்ளமும் பணிந்திடட்டும்.
பிறந்திரா உலகமும் பாடிடட்டும்.