நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி,
தம் மகனை நமக்காய் தந்தாரே,
அவர் தம் ஜீவனை ஈந்து மீட்டார்,
நாம் மோட்சம் ப்ரவேசிக்க
வாசல் தந்தார்,
பல்லவி
போற்றுவோம் பாடுவோம்
அவர் சப்தம் கேட்போம்
போற்றுவோம் வாழ்த்துவோம்
மண்ணோர் மகிழ,
நம் ஆண்டவர் கிறிஸ்துவால்
நம்மை மீட்டார்,
எண்ணில்லா நன்மை செய்தார்
போற்றிடுவோம்.
அவர் தம் இரத்தத்தால் இரட்சித்தாரே,
தம் வாக்குதத்தம் விசுவாசித்தோர்கு,
மா பாவியாம் பாவியும் மன்னிப்பாரே,
மன்னிப்பீந்து பாவியை இரட்சிப்பாரே,
பல்லவி
வல்லமையான காரியங்கள் செய்தார்,
தம் சொந்த மகனாலே மகிழ்ச்சியே,
நாம் பின்பற்ற நல் வழி காட்டினாரே,
மென்மேலும் மகிழ்வோம்
நாம் மோட்சத்திலே.
பல்லவி