வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.@பிரசங்கி 12:6–7
உருவப்படம்
பேனி கிராஸ்பி
1820–1915

பேனி கிராஸ்பி, 1891 (Saved by Grace). சௌ. ஜான் பாரதி (2018),

வெள்ளிக்கயிறு, ஜார்ஜ் கோல்ஸ் ஸ்டெபின்ஸ், 1894 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

உலக பந்தம் அறும் நாள் வருமே,
அப்போது நான் இப்போதுபோல்,
பாடுவேனோ?, ஆனால் ஆனந்தமே,

பல்லவி

என்றும் அவரைக்காண்பேன்
கிருபையால் நான் பெற்ற
இரட்சிப்பினை சொல்லுவேன்.

உலக வீடு விழுமே அதெப்போதோ?
நான் அறியேன், ஆனால் அதோ,
ஆம் எனக்காய், அங்கே ஓர் வீடுண்டு,

பல்லவி

உலக சூர்யன் மங்குமே நம் மேற்கிலே,
அப்போதென் ஆண்டவர் சொல்வார்,
நன்று செய்தாய் என் பிள்ளையே நீ வா,

பல்லவி

அந்நாள் வரை காத்திருந்து
ஒளிருமே என் விளக்கு, திறப்பாரே,
அவ்வாசலை என் மீட்ப்பர் எனக்காய்.

பல்லவி