தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.@சங்கீதம் 51:14
உருவப்படம்
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1719 (O God of Mer­cy, Hear My Call). சௌ. ஜான் பாரதி (மே 29, 2020),

ராகம் ஹென்டன், ஹென்றி ஆபிரகாம் சீசர் மலன், 1827; சேர்ந்திசை லோவல் மேசன், 1838 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

அருளின் வடிவாம் ஆண்டவா,
எந்தன் ஜெபமே கேளுமே,
கறைகளை நீரே நீக்குமே,
நம்மை பிரித்திடும் சுவர்களாம்
நம்மை பிரித்திடும் சுவர்களாம்.

காருண்யத்தின் சன்னிதானம்,
தாரும் நானும் ஆனந்திக்க,
உம் நீதி நியாயம் கூறுவேன்
போற்றி துதித்து பாடியே
போற்றி துதித்து பாடியே.

இரத்தம் சிந்தும் பலியினால்,
தீராதெந்த பாவமும்,
சிலுவை தந்த இரட்சிப்பொன்றே,
இன்றும் பாவம் போக்குமே
இன்றும் பாவம் போக்குமே.

பாவத்தில் சிக்குண்ட உள்ளமே,
தள்ளிடாரே என்றுமே,
தாழ் மையாக வேண்டிட,
அதுவே நமது பலியன்றோ?
அதுவே நமது பலியன்றோ?