ஆண்டவருடன் நடக்க
தெய்வீக அமைதி,
விண் ஜோதியே பிரகாசமாய்
என்னை நடத்துமே.
எங்கே என் ஆசீர்வாதமே,
நான் கண்ட ஆண்டவர்,
என் ஆன்மத்தை தூய்மையாக்கும்
அவ்வார்த்தை எங்கேயோ?.
என் சாந்தம் என் சமாதானம்,
நினைவில் நின்றதே,
வெற்றிடமாய் என்னையுமே
விட்டகன்றததே.
மீண்டும் வர அழைக்கிறேன்
அத்தூய ஆவியை,
அமைதியின் நல் தூதனை
நான் துக்கிக்க செய்தேன்.
என் நெஞ்சின் பிரிய சொரூபம்
அதேதாயினுமே,
நான் அகற்றி எரிந்திட்டே
உம்மை மாத்ரம் தொழ.
நான் இன்னுமும்மை நெருங்கி
என் அன்பின் ஆண்டவா,
மெய் ஒளி வழி நடந்து
உம் அண்டை சேருவேன்.
ஆமேன்