சின்னப்பிள்ளை நானே
மோட்சம் வாஞ்சிப்பேன்,
சின்ன சின்ன பாவம்
வெறுத்திடுவேன்.
வாழ்ந்து முடித்தோரை
பாவம் சேராது,
சோகம் அங்கே இல்லை
என்றும் சந்தோஷம்.
சின்னப்பிள்ளை நானும்
நல்ல பிள்ளைதான்,
விண் வீட்டில் வெண்ணங்கி
எனக்கும் உண்டு.
தூய வாழ்க்கை வாழ
உதவி செய்யும்,
தினம் வழி காட்டி
நடத்திடுமே.
அன்பு இயேசு ஸ்வாமி
உம்மை நேசித்தே,
சாட்சியாக நானும்
வாழ்ந்தே காட்டுவேன்.