தந்தேனிப்போ என் ஆன்மாவை,
உண்மையின் ஆண்டவா,
காத்தே என்னை மீட்டீர் நீரே,
சாவினின்று தூக்கி.
என் ஏக்கமும் என் பயமும்,
வந்தேகும் குழப்பமும்,
வேதனை பாவம் வியாகுலம்,
மாய்த்தென்னை வீழ்த்துதே.
என் காலம் உம் கைகளிலே,
நான் மண்ணாய் போனாலுமே,
ஒளிந்தே நான் வரும் இடம்,
கர்த்தாவே உம்மிடம்.
என் மீது வீச காண்பியும்
உம் ரூபம் அடியேன்மேல்,
கிருபையாலே நீர் மீட்டிடும்,
நான் உம்முடையோனே.
விரைந்தே சிந்திக்காமலே,
சாவேனென்றெண்ணினேன்,
உம் கண்முன்னே காணாமலே,
ஆனாலும் கேட்டீரே.
இலவசம் உம் கிருபையே,
உம் தயை விந்தையே,
பயத்துடன் உம் சமூகம்
வந்தேன் வாக்கை நம்பி.
நேசிப்போம் நாமும் உண்மையாய்,
ஆம் பாடி போற்றியே,
நம் வேண்டல் யாவும் கேட்டவர்,
தயவாய் ஈவாரே.