ஆண்டவர் தங்கும் இல்லமே,
அன்பால் நிறைந்ததே,
சேர்ந்தேற்கும் வேண்டல் ஆவலும்,
ஒன்றாவார் விண்ணிலே.
இயேசுவின் நாமம் தங்கிட,
செவியில் இன்பமாம்,
சிறாரும் அவரை போற்றிட,
பெற்றோரும் நேசிக்க.
ஜெபங்கள் பதில் பெற்றின்புற,
தினமும் போற்றவே,
வேதத்தில் ஆவல் கொண்டிட,
ஞானமாம் வெகுமதி.
ஆண்டவா எங்கள் இல்லங்கள்,
சமாதானம் பெற்றே,
ஒன்றாக்கும் எங்கள் உள்ளங்கள்,
உம் அன்பு ஆளட்டும்.
ஆமேன்.