மரணம் கண்டு அஞ்சோமே,
ஆண்டவர் எம்முடன்,
ஆழ்ந்த இருள் சூழ்ந்திடினும்,
அச்சத்திற்கிடம் கொடோம்.
என் ஆஸ்தி யாவும் வீணென்றே,
அவர் தம் சொல் கேட்டே,
ஓடியே சேர்வேன் அழைத்திட்டால்,
மோசேபோல் நானுமே.
பைசாகின் மேலே சென்றே நான்,
கானானைக்காணவே,
ஏதும் என்னை ஈர்க்காதே,
என் சாவு திவ்யமே.
என் தந்தை மார்பில் நானுமே,
மூச்சை நான் மறந்தேன்,
கேளிக்கை வாழ்வை தீர்த்தேனே,
மா தூய மரணத்தால்.ஆமேன்