என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.@யாக்கோபு 1:2–4

வில்லியம் எடி மார்க்ஸ், 1906 (Count It All Joy) 🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி (மே 19, 2020).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

எண்ணிப்பாராய் நீ கிறிஸ்துவின் சிலுவை
அவருக்காய் சுமந்திட இன்பமே,
விரைவாக, ஆம் மகிமையின் பாரம்
உண்மையுடன் அவருக்காய் செய்திட,

பல்லவி

என்ன இன்பம், என்ன இன்பம்,
கிறிஸ்துவிற்காய் செய்வதென்ன இன்பமே,
எண்ணிப்பாராய் நீ எண்ணிப்பாராய்
நீயும் அன்பாய் செய்யும்
எல்லோருக்கும் நன்மையே.

எண்ணிப்பாராய் நீ சோதனையின் காலம்
கிருபையுடன் தாங்கிடுவார் நம்மையே,
நம்பினாலே, ஆம் வென்றிடுவோம் உண்மை
நிச்சயம் அவர் நம் நண்பர் வெல்வோமே,

பல்லவி

எண்ணிப்பாராய் நீ பள்ளத்தாக்கினூடே
நடந்தாலும் இன்பப்பாடல் தருவார்,
உந்தன் துன்பம், ஆம் இன்பமாக மாற்றி
என்றும் துதி மகிமையும் அவர்க்கே,

பல்லவி