நேர்த்தியை காண கூடுமோ,
படைப்பில்லா கர்த்தர் ஞானமே,
படைப்பின் ஞானம் காணுமோ?
ஆண்டவர் ஆற்றல் யாவுமே.
அறியா ஆழம் உயரமும்,
மாளும் யாம் மாந்தர் அறிவோமோ?
வானின்று மேலும் உயரமே,
மின்னிடும் மேகம் மேலுயர்ந்தே.
மானுடன் வீணாய் தான் ஞானி என்றே,
எண்ணினும் தான் அற்ப விலங்கன்றோ?
மூடத்தனம் அவன் சிந்தை,
வெறும் காற்றன்றி வேறில்லை.
ஆண்டவர் வல்லமை யாரறிவார்,
திண்ணமாம் அவரின் வாக்குத்தத்தம்,
அவர் செய்கை யார் எதிர் சொல்வார்,
என்ன ஏதென்று யாரறிவார்.
உள்ளத்தின் காயங்கள் ஆற்றி அவர்,
மனப்புயல் சீற்றம் தணிப்பாரே,
துயரம் தன் கதவடைத்தால்,
யார் திறப்பார் யாரால் கூடும்.
நிலவும் மங்கும் சீற்றம் கண்டால்,
பகலில் சூர்யனும் இருளுமே,
அதிரும் விண்ணின் தூண்களும்,
ஆண்டவர் சொல்ல நடுங்குமே.
விண்ணுலகம் அவர் கைபடைப்பு,
சர்பங்களும் சிறு புழு பூச்சும்,
துன்பங்கள் தீர்ப்பார் சுவாஸத்தால்,
பெருமை கொண்டோர் மாய்ந்திடுவர்.
இவைகள் சில அவர் வழிகள்,
அவர் முகபாவம் யார் அறிவார்,
அவர் ஒளி முன்னே நிற்பவன் யார்?
அவர் கை மின்னல் முழக்கம்.