அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.@லூக்கா 2:13–14
உருவப்படம்
ஜேம்ஸ் மோன்ட்கோமெரி
1771–1854

ஜேம்ஸ் மோன்ட்கோமெரி, அவரது -தி ஐரிஸ், ஷிப்பீல்டு கிறிஸ்துமஸ் மாலை செய்தி தாளில் 1816 (An­gels from the Realms of Glo­ry). கிறிஸ்தவ சங்கீதக்காரனில் மறுபதிப்பு வெளியானது 1825. 5வது சரணம் தி கிறிஸ்துமஸ் பாக்ஸ் 1825. சௌ. ஜான் பாரதி (2018),

ரீஜன்ட் ஸ்கொய்ர், ஹென்றி தா ஸ்மார்ட் திவ்ய ஆராதனைக்கு சங்கீதங்களும் பாமாலைகளும் (லண்டன் 1867) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

மகிமையின் எல்லை முதல்
பூமி எங்கும் பறந்து,
பாடினீர் படைப்பினன்று
மேசியா வருகையும்,

பல்லவி

வந்து வாழ்த்தி போற்றி பாடி
இராஜ பாலன் தொழுவோம்.

மேய்ப்பர் மந்தை காத்திருக்க
இராவின் இருள் குளிரில்,
மண்ணோருடன் விண்ணின் தேவன்
சஞ்சரிக்க ஒளியாய்,

பல்லவி

ஞானியரே யோசனை ஏன்?
ஜோதி எங்கும் வீசுதே,
வாரும் பாரும் மாந்தர் வாஞ்சை
விந்தை நட்சத்ரம் கண்டீர்,

பல்லவி

தூய ஆவி கொண்ட நீங்கள்,
பயத்தோடு நம்பியே,
காத்திருக்க வேந்தர் வந்தார்
தோன்றுவார் தம் ஸ்தலத்தில்,

பல்லவி

வாஞ்சித்தே மனந்திரும்ப
நரகத்தை தவிற்க,
நியாயத்தீர்ப்பு தீர்த்திடாமல்
தயவாய் கட்டவிழ்க்க,

பல்லவி

இன்று காணும் பாலனிவர்,
தன் தந்தையின் ஸ்தானத்தில்,
தேசம் யாவும் அவர் முன்னர்
முடக்கும் முழங்கால்கள்.

பல்லவி

அவர் படைப்பாய் நாம் ஒன்றாய்
பிதா சுதன் ஆவிக்கு
என்றும் ஒன்றாய் ஓர் தொனியாய்
மூவரான ஏகர்க்கே.

பல்லவி

ஆமேன்.